Tuesday, August 17, 2021

காமோகார்ஷீத் ஜபம் 2021

 #காமோகார்ஷீத் ஜப ஸங்கல்பம்

 22.08.2021

 *ஞாயிற்றுக்கிழமை* 

 சுக்லாம் + சாந்தயே ஓம் பூ : + பூர்ப்புவஸ்ஸுவரோம் மமோபாத்த + ப்ரீத்யர்த்தம் 

சுபே சோபனே முஹுர்த்தே ஆத்யப்ரஹ்மண : த்வீதிய பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம் சதிதமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ : தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மிந் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபாவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே பிலவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷருதௌ சிம்மமாஸே சுக்லபக்ஷே பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ பானுவாஸர யுக்தாயாம் ஸ்ரவிஷ்டா நக்ஷத்திர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவம்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோத் ஸர்ஜன அகரண ப்ராயச் சித்தார்த்தம் அஷ்டோத்ர (ஸஹஸ்ர) 1008 சதஸங்க்யயா 108 காமோகார்ஷீத் மன்யுர கார்ஷீதிதி மஹாமந்த்ரஜபம் கரிஷ்யே

 ( பிறகு காமோகார்ஷீத் மந்யுர கார்ஷீத் நமோ நம 1008 or 108 ஜபித்து முடிவில் பிராணாயாமம் செய்து உபஸ்தானம் செய்யவும் .

Monday, July 19, 2021

अग्नि அக்னி

 यज्ञपुरुषस्य जिह्वास्थानानि विज्ञाय होतव्यम् अज्ञात्वा होमे दोषस्मरणात्--तदाह सङ्ग्रहकारः

यत्र काष्ठं तत्र कर्णौ हुनेच्चेद्व्याधिकृन्नरः । धूमस्थाने शिरः प्रोक्तं मनोदुःखं भवेदिह ।। यत्राल्पज्वलनं नेत्रं यजमानस्य नाशनम् । भस्मस्थाने तु केश: स्यात्स्थाननाशो धनक्षयः ॥ अङ्गारे नासिकां विद्यान्मनोदुःखं विदुर्बुधाः । यत्र प्रज्वलनं तत्र जिह्वा चैव प्रकीर्तिता । गजवाजिप्रणादे तु वह्निः शुभफलप्रदः। इति।।(अन्यच्च)यत्र काष्टमिदं कर्णौ यत्र धूमस्तु नासिका । काष्ठमल्पज्ज्वलन्नेत्रं ज्वलनं मूर्ध्नि विन्यसेत् ।। प्रज्वाला  वह्निजिह्वायामेतद्धोमस्य लक्षणम् । अग्नौ कर्णाहुतिः कुर्याद्दुर्भिक्षव्याधिपीडनम् ।। नासिकायां मनोदुःखं चक्षुषी ग्रामनाशनम् । मूर्ध्नि स्थाने शुभं कुर्याद्राजा राष्ट्रे विनश्यति ॥ तस्मात्सर्वप्रयत्नेन जिह्वायां होममाचरेत् ।। जिह्वास्थानं तु न ज्ञात्वा होमं यः कुरुते द्विजः । स होमो निष्फलं याति यदि होमस्य दुर्गतिः।। इति||

Monday, August 17, 2020

अथ कुमारिलभट्टस्वामि कारिकाः


कुर्वीत पार्वणश्राद्धं दर्शे तदभिधीयते ।
कामयोगेन वान्यस्यां तिथावित्यपरेऽब्रुवन् ॥ १
ब्राह्मणान्वेदसंपन्नान्दान्ताञ्शान्तानलोलुपान् ।
अक्रोधानानरोगांश्च पाखण्डकुलनिःस्पृहान् ॥ २
एवंविधद्विजाभावे सतैकेन गुणेन वा ।
युक्तान्निमन्त्रयीतार्हानसद्गुणविवर्जितवान् ॥ ३
विहितानामधिष्ठातॄन्निषिद्धानां च वर्जकान् ।
शुचीन्निमन्त्र्य दैवे द्वौ त्रीन्विप्रान्पितृकर्मणि ॥ ४
दैवे पित्र्येथवेकैकं सपिण्डीकरणं विना ।
सायमौपासनं हुत्वा सायं भुक्तवतो द्विजान् ॥ ५
उपगम्य स्वयं शिष्यःसुतो वा श्रद्धयान्वितः।
श्राद्धं श्वो भविता तत्र भवद्भिर्दीयतां क्षणः ॥ ६
एवं निमन्त्र्य नियतो मनोवा,य कर्मभिः ।
         भोक्तुर्भोजयितुश्चैव ब्रह्मचर्यमतःपरम् ॥७
कृताह्निकःपरेद्यस्तु प्रविशेच्चाग्निवेश्मसु ।
ततःसंकल्प्य विधिवत्प्रारभेत्सुसमाहितः ॥ ८
कृत्वेत्माधानपर्यन्तं पितृयज्ञमथद्विजान् ।
तान्स्नातान्कृतपच्छौचानाचान्तान्तानुपवेशयेत् ॥ ९
द्विराचामन्ति ते विप्राःकर्त्रा प्रक्षालिताङ्घ्र्यः।
द्वौ दैवे प्राङ्मुस्वौ पित्र्ये त्रीन्विप्रानुदगाननात् ॥ १०
ध्यायन्ममैते पितर इति तानुपवेशयेत् ।
अर्चयित्वोपविष्टौ तु दैवे स्मृत्युक्तमार्गतः॥११
ये पक्षाःकथिताःपिण्डयज्ञे जीवमृतान्प्रति ।
श्राद्धेऽपि वेदितव्यास्ते पक्षाःइत्याह वृत्तिकृत् ॥१२
प्राचीनावीत्यपो दत्वा  पितृकर्माप्रदक्षिणम् ।
दर्भान्द्विगुणभुग्नांस्तु दत्वैषामासनेष्वथ ॥१३
अपो दत्वाथ दर्भेषु पात्राण्यासादयेत्क्रमात् । 
         तैजसेऽस्ममये पात्रे मृण्मयेऽन्तर्हिते कुशैः॥१४
एकद्रव्येषु चाग्नेयीदिक्संस्थेषु च तेष्वथ ।
निषिच्यापोऽनुमन्त्र्यर्चा शंनोदेवीरभिष्टये ॥ १५
अनुमन्त्रःसकृत्कार्यःतिलोऽसीत्यावपेत्तिलान् ।
आवृत्तिःप्रतिपात्रं स्यान्मन्त्रस्योहस्तु नेष्यते ॥१६
गन्धपुष्पाणि चैतेषु पात्रेषु प्रक्षिपेदथ ।
स्वधार्घ्या इत्यपोर्घ्यास्ता उपवीति निवेदयेत् ॥१७
अन्या आपःप्रदातव्या विप्रपाणिष्वतःपरम् ।
अर्घ्यं सशेषमादाय दक्षिणेन तु पाणिना ॥ १८
सव्यहस्तगृहीतेन निनयेत्पितृतीर्थतः।
त्रिभिःपितरिदं  तेऽर्घ्यमिति पाणिष्वनुक्रमात् ॥१९
दत्वा दत्वा निनीतास्ता या दिव्यास्तानुमन्त्र्य तु ।
पितृपात्रे प्रसिच्यार्घ्यं शेषं पात्रद्वये स्थितम् ॥२० 
अनक्ति पुत्रकामस्तैर्मुखमेकीकृतैःजलैः। 
         न्यग्बिलं पितृपात्रं स्यादासमाप्तेस्तु कर्मणः॥२१
उत्तानं वा तृतीयेन पिहितं तन्न चालयेत् ।
प्राचीनावीत्यथेदानीं गन्धमाल्यं सधूपकम् ॥२२
दीपं वस्त्रं यथाशक्ति देयं वार्यन्तरान्तरा ।
पितृयज्ञचरोरन्नं  उद्धृत्याभ्यज्य सर्पिषा ॥२३
अग्नौ करिष्य इत्येतान् पृष्ट्वोक्तःक्रियतामिति।
मेक्षणानुप्रहृत्यन्तं पितृयज्ञं करोत्यथ ॥ २४
अन्नेषु परिविष्टेषु हुतशेषं ददात्यथ ।
उद्दिश्य चान्नं विश्वेभ्यःपितृभ्यःश्रद्धया ततः॥२५
भुञ्जानाञ्श्रावयेद्विप्रान् राक्षोघ्नान् पितृलिङ्गकान्।
पुराणानि पवित्राणि ऋषिगीतां पितृस्तुतिम् ॥२६
अन्नं भोजनपर्याप्तं देयं किंचित्ततोऽधिकम् ।
तृप्तेषु श्रावयेत्तिस्रो मधुवाता ऋतायते ॥२७
अक्षन्निति च तान्विप्रान्संपन्नमिति च पृच्छति ।
         तेऽपि संपन्नमित्येवं प्रतिब्रूयुरतःपरम् ॥ २८
यद्यद्भुक्तं ततःकिंचित्किंचित्पिण्डार्थमुद्धरेत्।
पितृयज्ञचरोरन्नमुद्धृतं प्रक्षिपेदथ ॥२९
अन्नं प्रकिरणार्थे च सर्वस्मादन्नमुद्धरेत् ।
ब्राह्मणेभ्यस्ततःशिष्टं सर्वमन्नं निवेदयेत् ॥३०
तेऽपि स्वीकुर्युरिष्टं चेदनुजानन्ति वा पुनः।
पिण्डदानमनाचान्तेष्वाचान्तेष्वथवा भवेत् ॥३१
अम्भोनिनयनाद्यन्तं पितृयज्ञं समापयेत् ।
अन्नं प्रकिरणार्थाय तदानीय जलप्लुतम् ॥ ३२
आचान्तानां समीपे तु त्वग्रतःप्रकिरेद्भुवि ।
उत्तानं प्रथमं पात्रं कृत्वा यज्ञोपवीत्यथ ॥ ३३
दत्त्वा च दक्षिणां शक्त्या विसृजेदों स्वधोच्यताम् ।
ओं स्वधीते प्रतिब्रूयुर्याचेतेमान्वरान्पितॄन् ॥३४
दक्षिणां दिशमाकाङ्क्षन्नियतो वाग्यतःशुचिः।
            दातारो नोऽभिवर्धन्तां वेदाःसंततिरेव नः।
श्रद्धा च नो मा व्यगमद्भहुदेयं च नोऽस्त्विति ॥३६
            ब्रह्मचारी भवेत्तस्यां रजन्यां ब्राह्मणैःसह ॥३७
                   इति दर्शश्राद्धकारिकाः ।

Friday, August 14, 2020

மாத்ரு ஷோடஸி ஸ்லோகமும் அர்த்தமும் (16 ஸ்லோகங்கள்): “க்ஷேத்ராடனம்” புஸ்தகத்திலிருந்து



கயாவில் அக்ஷய வடம் என்பது ஒரு பிரமாண்டமான வ்ருக்ஷம். ஆல மரமாகும். இதன் நிழலில் நாம் பிண்ட பிரதானம் செய்கின்றோம். மிகவும் விசேஷம். 64 பிண்டங்களில் அம்மாவிற்கு மட்டும் 16 பிண்டங்களை வைக்கிறோம். இதற்கு “மாத்ரு ஷோடஸி” என்றும் கூறுவர். 
இந்த 16 ஸ்லோகங்களைச் சொல்லி தனது தாயாருக்கு 16 பிண்ட பிரதானம் செய்ய வேண்டும்.  அந்த ஸ்லோகங்களையும், அதன் அர்த்தங்களையும் இப்போது இங்கு பார்ப்போம்.

1.  கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
என்னைக் கர்ப்பத்தில் தாங்கிய படி, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது என் தாய் வேதனைகளை அனுபவித் தாளே, அதனால் எனக்கு விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
ஒவ்வொரு மாதத்திலும், பிரசவத்தின் போதும் என் தாய்க்கு என்னால் ஏற்பட்ட வேதனைகளை உண்டாக்கிய பாவத்திற்குப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
என் தாயின் வயிற்றில் நான் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனை எனக்குச் சேர்த்த பாவமூட்டைக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

4.  ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நிறை கர்ப்பிணியாக என் தாய் என்னைச் சுமந்தபோது அவளுக்கு உண்டான வேதனைகள் எனக்குச் சேர்த்த பாவத்தைப் போக்க இப்பிண்டத்தைத் தருகின்றேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
தாயின் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை போன்றவற்றால் வந்த வேதனைகள் எனக்கு விளைவித்த பாவத்தைப் போக்க, பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

6. பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
என்னை வியாதிகள் தாக்காமல் இருக்க, கசப்பான மருந்துகளைச் சாப்பிட்டாளே என் தாய், அவளுக்கு நான் செய்த இந்தக் கொடுமைகளினால் எனக்கு உண்டான பாவத்தைப் போக்க, பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

7. அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் பிறந்த போது மூன்று நாட்கள் அன்ன & ஆகாரமின்றி ஜடராக்னியின் (பசி என்னும் பெரு நெருப்பு) வெம்மையில் என் தாய் நொந்தாளே, அவளுக்கு என்னால் ஏற்பட்ட இந்த கொடுமை எனக்கு விளைவித்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
இரவில் நான் என் தாயின் ஆடைகளை, மல மூத்திரத்தால் அசுத்தம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.

9. க்ஷ§தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
எனது பசி, தாகம் தீர்க்க (தனக்கு இல்லையென்றாலும்) அவ்வப்போது உணவும் நீரும் எனக்குத் தந்தாளே என் தாய், அவளை வருத்திய பாவத்தை நீக்கப் பரிகாரமாக இப்
பிண்டத்தைத் தருகிறேன்.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
அல்லும் பகலும் என் தாயின் முலைப் பால் அருந்தும் போது அவளை நான் துன்புறுத்தினேனே, அதனால் விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.

11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
மாக மாதத்தில் சிசிர ருதுவில் கோடையில் என்னைக் காக்கத் தன் உடலை வருத்திக் கொண்டாளே என் தாய், அவளுக்கு நான் தந்த இந்தத் துன்பங்களால் விளைந்த பாபங்களைப் போக்கிக் கொள்ளப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
மகன் நோய்வாய்ப்பட்டானே என்று கவலையால் வாடி இருந்தாளே என் தாய், அவளுக்கு விளைவித்த அந்த மனத் துயருக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
யமலோகம் செல்லும் என் தாய் கோரமானவற்றை
யெல்லாம் கடந்து செல்வதற்குத் துணை நிற்பதற்காக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
என் தாய்க்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக, அறிவுசால் புத்திரர்கள் அவர்களது தாய்க்குச் செய்வதை ஒப்ப, நானும் இப்பிண்டத்தைத் தருகின்றேன்.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் நன்கு வளர்வதற்காக, தனக்கு ஆகாரம் இல்லாமல் கூட கஷ்டப்பட்டாளே அந்தத் தாய்க்குத் நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
கர்ப்பத்திலும், சிசுவாக இருந்த போதும் மரண வேதனையை ஒத்த பல கஷ்டங்களை நான் என் தாய்க்குத் தந்தமைக்குப் பரிகாரமாக இந்த பிண்டத்தைத் தருகின்றேன்.

இந்த ஸ்லோகங்களை படித்து முன்பே பரிச்சயம் செய்து கொள்வதும், அவற்றின் பொருளை அறிந்து கொள்வதும், கர்த்தா மனம் ஒன்றித் தன் கடமையை ஆற்ற உதவும்.


Thursday, August 6, 2020

Varalakshmi Pooja லகு வரலக்ஷ்மி பூஜை

#வரலட்சுமி_பூஜைக்கு தேவையான பொருட்கள்

வரலட்சுமி விரதம் 
ஸார்வரி வெள்ளிக்கிழமை, 31, ஜூலை மாதம் 2020, ஆடி மாதம் 16 ஆம் தேதி

#மண்டபத்திற்கு_அலங்காரபொருட்கள்.

1- சின்ன வாழைக்கன்று இரண்டு
2- தோரணம் (கிடைத்தால்)
3- மாவிலை தோரணத்திற்கு.
4- முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின்    பின் அலங்காரத்தை ரசிக்க) 
5- சீரியல் மின் விளக்கு. அதை இணைக்க தேவையான extension cord.
6- பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு.

1- அம்மனை வைக்க சொம்பு.
2- காதோலை இரண்டு பக்கமும் வைக்க
3- கருக வளையல் இரண்டு பக்கமும் வைக்க
4- மாவிலைக்கொத்து, தேங்காய் மற்றும் அம்மன் வைக்க
5-தாழம்பூ ( கிடைத்தால் அதை கருக வளையலில் சேர்த்து இரு பக்கமும் வைக்கலாம்)
6- ஜடை அலங்காரம் இப்போது பூக்கடைகளில் கிடைக்கிறது.
7- சொம்பிற்கேற்ப சிறிய தேங்காய்.
8- சிறிய வாழை இலை. அதில் அரிசியை பரப்பி, அம்மனை வைக்க
9- புதிய ரவிக்கை துண்டு (அம்மனுக்கு சாத்த)

#பூஜைக்கு_தேவையான_பொருட்கள்.

1- திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.
2- பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு)
3- பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
4- மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்
5- ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
6- மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
7- பஞ்ச பாத்திரம், உத்தரினி.
8- இழை(மா)க்கோலம் போட தேவையான பொருட்கள் 
9- மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ.
10- அர்க்கியம் விட கொஞ்சம் பால்

#நைவேத்தியங்கள்.

1-இட்லி
2- அப்பம்
3- வடை (உளுந்து வடை)
4-கொழுக்கட்டை 
5-வெல்ல பாயசம்
6- கொத்துக்கடலை சுண்டல் (சாயந்திரம் நைவேத்தியத்திற்கு) 
7- இதற்கு தேவையான தேங்காய், வெல்லம் மற்றும் தேவையான மளிகை சாமான்கள்

#பழ_வகைகள் 

1- வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா பழங்களும்.

பூஜை முடிந்த பின், அர்க்கியம் விட்ட பிறகு, மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ளவும். 

மாலையில் அம்மனுக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து, கற்பூரம் ஆரத்தி எடுக்கவும்.

பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கவும். 

மறு நாள் காலை புனர்பூஜை செய்து, அம்மனை எடுத்து அரிசி பானையில் வைக்கவும். 

அம்மன் வைத்த அரிசியை, வரும் கிருஷ்ண ஜயந்தி பட்சணம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம்.

#விக்னேஸ்வர_பூஜை 
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, 
ஓம் அச்சுதாய நம: 
ஃ ஓம் அனந்தாய நம: 
ஃ ஓம் கோவிந்தாய நம: 
என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம். 

கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும். 
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்| 
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே|| 

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே|| 
- என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும். 
அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி ஃ ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி ரூ என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும். 

இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும். 

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி| 
” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) 
” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) 
” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) 
” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்) 
” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) 
” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) 
” உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) 
” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்) 
” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்) 
” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்) 
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும். 

ஓம் சுமுகாய நம: | 
ஓம் ஏகதந்தாய நம: | 
ஓம் கபிலாய நம: | 
ஓம் கஜகர்ணாய நம: | 
ஓம் லம்போதராய நம: | 
ஓம் விகடாய நம: | 
ஓம் விக்னராஜாய நம: | 
ஓம் விநாயகாய நம: | 
ஓம் தூமகேதவே நம: | 
ஓம் கணாத்யக்ஷாய நம: | 
ஓம் பாலசந்த்ராய நம: | 
ஓம் கஜானனாய நம: | 
ஓம் வக்ரதுண்டாய நம: | 
ஓம் சூர்ப்பகர்ணாய நம: | 
ஓம் ஹேரம்பாய நம: | 
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: | 
ஓம் ஸித்திவிநாயகாய நம: | 
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: 
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும். 

அம்ருதோபஸ்தரணமஸி | 
ஓம் ப்ராணாய ஸ்வாஹா | 
ஓம் அபாநாய ஸ்வாஹா | 
ஓம் வ்யாநாய ஸ்வாஹா | 
ஓம் உதாநாய ஸ்வாஹா | 
ஓம் ஸமாநாய ஸ்வாஹா | 
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா | 
மஹாகணபதயே நம: 
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி | 
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்… 
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும். 

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப| 
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூஸர்வதா|| 
- என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும். அடைப்புக் குறிக்குள்() இருப்பவை இந்த வருடத்துக்கான ( ) நாள் நட்சத்திரங்கள்… 

சுபே சோபனே முஹ_ர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்ரூ தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதிரூ ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, சார்வரி நாம ஸம்வத்ஸரே, தெக்ஷ்ணாயனே கீர்ஷ்மருதௌ, கடகமாஸே, சுக்லபக்ஷே, துவாதஸ்யாம் சுபதிதௌ,ப்ருகு வாஸரயுக்தாயாம், ஜ்யேஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் துவாதஸ்யாம் சுப திதௌ, 
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யானரூபா ஆவாஹனாதி ஷோடச உபசாரை:  ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே| ரூ 

என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, 

ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி | 
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச || 
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும். 

பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு, 

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி 
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ 
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு|| 
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும். 

கங்காயை நம:| 
யமுனாயை நம:| 
கோதாவர்யை நம:| 
ஸரஸ்வத்யை நம:| 
நர்மதாயை நம:| 
ஸிந்தவே நம:| 
காவேர்யை நம:| 
தாம்ரவர்ண்யை நம: 
என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும். 

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:| 
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:|| 

என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும். 

அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய, 
ப்ரம்மரூவிஷ்ணு ரூமஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்) 
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்) 
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்) 
ஆம்ரூபீஜம், ஹ்ரீம்ரூசக்தி:, க்ரோம்ரூகீலகம்|| 

பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும். 

ஆவாஹிதோ பவ| 
ஸ்தாபிதோ பவ| 
ஸந்நிஹிதோ பவ| 
ஸந்நிருத்தோ பவ| 
அவகுண்டிதோ பவ| 
ஸுப்ரீதோ பவ| 
ஸுப்ரஸன்னோ பவ| 
ஸுமுகோ பவ| 
வரதோ பவ| 
ப்ரஸீத ப்ரஸீத| 
தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்| 
தாவத் த்வம் ப்ரீதிரூபாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு|| 

- இப்படி ப்ராண ப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும். 

கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும். 

பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்| 
க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்| 
க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்| 
பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே| 
வரலக்ஷ்ம்யை நம:| 
என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும். 

பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸ_த்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹூலான் வரான்|| 
என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும். 

ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே| 
ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ|| 
வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி| 
ரூ என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும். 

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்) 
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்) 
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்) 
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்) 
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்) 
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்) 
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை) 
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸ_த்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணிஃபனைஓலை அணிவிக்க)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்) 
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்) 
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்) 
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்) 

பிறகு அங்க பூஜை செய்யவும். 
முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும். 

பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோத்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

ஓம் ப்ரக்ருத்யை நம: 
ஓம் விக்ருத்யை நம: 
ஓம் வித்யாயை நம: 
ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம: 
ஓம் ச்ரத்தாயை நம: 
ஓம் விபூத்யை நம: 
ஓம் ஸுரப்யை நம: 
ஓம் பரமாத்மிகாயை நம: 
ஓம் வாசே நம: 
ஓம் பத்மாலயாயை நம: 
ஓம் பத்மாயை நம: 
ஓம் சுசயே நம: 
ஓம் ஸ்வாஹாயை நம: 
ஓம் ஸ்வதாயை நம: 
ஓம் ஸுதாயை நம: 
ஓம் தன்யாயை நம: 
ஓம் ஹிரண்மய்யை நம: 
ஓம் லக்ஷ்ம்யை நம: 
ஓம் நித்யபுஷ்டாயை நம: 
ஓம் விபாவர்யை நம: 
ஓம் அதித்யை நம: 
ஓம் தித்யை நம: 
ஓம் தீப்தாயை நம: 
ஓம் வஸுதாயை நம: 
ஓம் வஸுதாரிண்யை நம: 
ஓம் கமலாயை நம: 
ஓம் காந்தாயை நம: 
ஓம் காமாக்ஷ்யை நம: 
ஓம் க்ரோதஸம்பவாயை நம: 
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம: 
ஓம் புத்தயே நம: 
ஓம் அநகாயை நம: 
ஓம் ஹரிவல்லபாயை நம: 
ஓம் அசோகாயை நம: 
ஓம் அம்ருதாயை நம: 
ஓம் தீப்தாயை நம: 
ஓம் லோகசோக விநாசின்யை நம: 
ஓம் தர்மநிலயாயை நம: 
ஓம் கருணாயை நம: 
ஓம் லோகமாத்ரே நம: 
ஓம் பத்மப்ரியாயை நம: 
ஓம் பத்மஹஸ்தாயை நம: 
ஓம் பத்மாக்ஷ்யை நம: 
ஓம் பத்மஸுந்தர்யை நம: 
ஓம் பத்மோத்பவாயை நம: 
ஓம் பத்மமுக்யை நம: 
ஓம் பத்மநாபப்ரியாயை நம: 
ஓம் ரமாயை நம: 
ஓம் பத்மமாலாதராயை நம: 
ஓம் தேவ்யை நம: 
ஓம் பத்மின்யை நம: 
ஓம் பத்மகந்தின்யை நம: 
ஓம் புண்யகந்தாயை நம: 
ஓம் ஸுப்ரஸன்னாயை நம: 
ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம: 
ஓம் ப்ரபாயை நம: 
ஓம் சந்த்ரவதனாயை நம: 
ஓம் சந்த்ராயை நம: 
ஓம் சந்த்ரஸஹோதர்யை நம: 
ஓம் சதுர்ப்புஜாயை நம: 
ஓம் சந்த்ரரூபாயை நம: 
ஓம் இந்திராயை நம: 
ஓம் இந்துசீதளாயை நம: 
ஓம் ஆஹ்லாதரூஜனன்யை நம: 
ஓம் புஷ்ட்யை நம: 
ஓம் சிவாயை நம: 
ஓம் சிவகர்யை நம: 
ஓம் ஸத்யை நம: 
ஓம் விமலாயை நம: 
ஓம் விச்வஜனன்யை நம: 
ஓம் துஷ்ட்யை நம: 
ஓம் தாரித்ர்யரூநாசின்யை நம: 
ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம: 
ஓம் சாந்தாயை நம: 
ஓம் சுக்லமால்யாம்பராயை நம: 
ஓம் ச்ரியை நம: 
ஓம் பாஸ்கர்யை நம: 
ஓம் பில்வநிலயாயை நம: 
ஓம் வராரோஹாயை நம: 
ஓம் யசஸ்வின்யை நம: 
ஓம் வஸுந்தராயை நம: 
ஓம் உதாராங்காயை நம: 
ஓம் ஹரிண்யை நம: 
ஓம் ஹேமமாலின்யை நம: 
ஓம் தனதான்யகர்யை நம: 
ஓம் ஸித்தயே நம: 
ஓம் ஸ்த்ரைண ஸெளம்யாயை நம: 
ஓம் சுபப்ரதாயை நம: 
ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம: 
ஓம் வரலக்ஷ்ம்யை நம: 
ஓம் வஸுப்ரதாயை நம: 
ஓம் சுபாயை நம: 
ஓம் ஹிரண்யப்ராகாராயை நம: 
ஓம் ஸமுத்ரதனயாயை நம: 
ஓம் ஜயாயை நம: 
ஓம் மங்களாதேவ்யை நம: 
ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம: 
ஓம் விஷ்ணுபத்ன்யை நம: 
ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம: 
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம: 
ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம: 
ஓம் தேவ்யை நம: 
ஓம் ஸர்வோபத்ரவரூவாரிண்யை நம: 
ஓம் நவதுர்காயை நம: 
ஓம் மஹாகால்யை நம: 
ஓம் ப்ரஹ்மவிஷ்ணுரூ சிவாத்மிகாயை நம: 
ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம: 
ஓம் புவனேஸ்வர்யை நம: 
 
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Friday, July 31, 2020

யஜுர் வேத ஸமிதாதானம்

யஜுர்வேத ஸமிதாதானம்

பிரம்மசாரிகள் செய்ய வேண்டியது

1. சுக்லாம் பரதரம் - சாந்தயே

2. ப்ராணாயாமம்

3. மமோபாத்த ஸமஸ்த - ப்ரீத்யர்த்தம் ப்ராத:ஸமிதாதாநம் கரிஷ்யே

(என்று காலையிலும் ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே என்று மாலையிலும் ஸங்கல்பம் செய்து கொள்ளவும். வரளியில் அக்னியை வைத்து ஜ்வாலை செய்யவும். தீர்த்த பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு ப்ரார்த்திக்கவும்)

4. பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேனச

ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம் ஸுவீரோ வீரை:

ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸுபோஷ:போஷை: ஸுக்ருஹோ

க்ருஹை:ஸுபதி: பத்யா ஸுமேதா மேதயா ஸ¨ப்ரஹ்மா

ப்ரம்ஹசாரிபி (என்று ப்ரார்த்தித்து தீர்த்தத்தால் மௌனமாக பரிஷேசனம் செய்யவும்)

பின்வரும் மந்திரங்களைச் சொல்லி ஸமித்துக்களை அக்னியில் சேர்க்கவும்.

1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே

யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷா வர்ச்சஸாஸன்யா

மேதயா ப்ரஜயா பசுபி:ப்ரஹ்ம வர்ச்சஸேன அன்னாத்யேந ஸமேதய ஸ்வாஹா

2. ஏதோஸி ஏதிஷிமஹி ஸ்வாஹா

3. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா

4. தேஜோஸி தேஜோமயி தேஹி ஸ்வாஹா

5. அபோ அத்ய அன்வசாரிஷம் ரஸேன ஸமஸ்ருக்ஷ்மஹி

பயஸ்வான் அக்ன ஆகமம் தம்மா ஸகும்ஸ்ருஜ வர்சஸா ஸ்வாஹா

6. ஸம்மாக்னே வர்சஸா ஸ்ருஜப்ரஜயாச தநேநச ஸ்வாஹா

7. வித்யுன்மே அஸ்ய தேவா:இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா

8. அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா

9. த்யாவா ப்ருதிவீப்யாம் ஸ்வாஹா

10. ஏஷாதே அக்னே ஸமித்தயா வர்த்தஸ்வச ஆப்யாயஸ்வச

தயாஹம் வர்தமானோ பூயஸாம் ஆப்யாயமாநஸ்ச ஸ்வாஹா

11. யோமாக்னே பாகினம் ஸந்தம் அதாபாகம் சிகீர்ஷதி

அபாகமக்னே தம் குரு மாமக்னே பாகினம் குரு ஸ்வாஹா

12. ஸமிதம் ஆதாயாக்னே ஸர்வ வ்ரதோ பூயாஸம் ஸ்வாஹா

(பிறகு மௌனமாக அக்னியைப் பரிஷேசனம் செய்யவும்)

13. ஸ்வாஹா என்று ஸமித்தைச் சேர்க்கவும். (எழுந்திருந்து நின்று கைகுவித்து)

அக்னே : உபஸ்தானம் கரிஷ்யே

1. யத்தே அக்னே தேஜஸ்தேனாஹம் தேஜஸ்வீ பூயாஸம்

2. யத்தே அக்னே வர்சஸ்தேனாஹம் வர்சஸ்வீ பூயாஸம்

3. யத்தே அக்னே ஹரஸ்தேந அஹம் ஹரஸ்வீ பூயாஸம்

4. மயிமேதாம் மயிப்ரஜாம் மய்யக்கனி:தேஜோததாது

5. மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்த்ர:இந்திரீயம் ததாது

6. மயிமேதாம் மயிப்ரஜாம் மயி ஸ¨ர்யோ ப்ராஜோ ததாது

அக்னயே நம: மந்த்ர ஹீநம் க்ரியா ஹீநம் பக்திஹீநம் ஹ§தாசந

யத்ஹ§தம்து மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துதே

ப்ராய சித்தானி அசேஷானி தபஹ கர்ம ஆத்மகானிவை.

யானி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்.

ஸ்ரீ க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண

ஸாஷ்டாங்க நமஸ்காரம் (ஹோம பஸ்மத்தை இடது கையில் எடுத்து ஜலத்தால் (தண்ணீரால்) நனைத்து கீழ்க்கண்ட மந்தரம் சொல்லி பவித்ர விரலால் குழைக்கவும்)

மாநஸ் தோகே தநயே மாநஆயுஷி மாநோ கோஷ§மாநோ அச்வேஷ§ரீரிஷ

வீரான் மாநோ ருத்ரபாமிதோவதீ: ஹவிஷ் மந்நோ நமஸா விதேமதே.

கீழே காணும் இடங்களில் திலகம் வைத்துக்கொள்ளவும்

மேதாவீ பூயாஸம் --- நெற்றியில்

தேஜஸ்வீ பூயாஸம் --- மார்பில்

வர்ஜஸ்வீ பூயாஸம் --- வலது தோளில்

ப்ரம்மவர்சஸ்வீ பூயாஸம் --- இடது தோளில்

ஆயுஷ்மான் பூயாஸம் --- கழுத்தில்

அன்னாதோ பூயாஸம் --- பின் கழுத்தில்

ஸ்வஸ்தி பூயாஸம் --- சிரசில்

என்று பஸ்ம தாரணம் செய்யவும்.

ஸ்வஸ்தி, ச்ரத்தாம் மேதாம்யச:ப்ரக்ஞாம் வித்யாம் புத்திம் ச்ரியம் பலம்.

ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்ய வாஹந

ச்ரியம் தேஹிமே ஹவ்ய வாஹந ஓம் நம இதி 

என்று ப்ரார்த்திக்கவும்.

ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்பணமஸ்து

ஆவணி அவிட்டம் என்றால் என்ன

ஆவணி அவிட்டம் என்றால் என்ன. ?

இந்தவருடம் திருமணம் செய்து கொள்ள போகும் ஒருவரின் மகன் " மாமா ஆபீஸுக்கு நேரமாகி விட்டது , என்வே நான் குளிச்சுட்டு பூணல் மாத்தின்டாச்சு" நீங்கள் எனக்காக வெயிட் பண்ணாமல் மற்றவாளுக்கு பூணல் மாற்றி விடுங்கோ என கைபேசியில் கூறியபோது 

அழுவதா அல்லது இப்படியும் குழந்தைகள் உள்ளதே என நினைத்து வருத்தப்படுவதா என பல நேரம் சிந்தித்துள்ளேன்

ஆவணி அவிட்டம் என்றால் வெறுமனே பூணல் மாற்றிக்கொள்ளவேணும்  காமோகாரிசத் என்று ஒரு மந்திரம் காலையில் சொல்லனும் பின்பு இட்லியோ டிபனோ சாப்பிடனும் பின்பு ஒரு சங்கல்பம் சொல்லி ஸ்னானம் செய்து புது பூணல் போட்டுக்கனும் அரிசி மற்றும் எள்ளால் ரிஷிதர்பணம் பிதுர் தர்பணம் ( அப்பா இல்லாதவர்கள்) பண்ணனும் ஆத்துக்கு வந்து கால் அலம்பணும் பின்னர் விருந்து ( ஆவணி அவிட்ட சமையல் அசடு கூட செய்வாளாம் - அவ்வளவு நேரமாகுமாம் இந்த கர்மாவை செய்ய) சாப்பிடனும் அவ்வளவுதான் 
(இட்லி டிபன் சாப்பிடலையா இரண்டாம் குளியல் இல்லாமல் அப்படியே தொடரலாம் - யார் சொன்னார்களோ) ஆவணி அவிட்டம் எனநம்மில் பலரும் இன்றயஇளைய தலைமுறையினரில் மெஜாரிட்டி ஆனவர்களும் நினைக்கிறார்கள்

ஆவணி அவிட்டம் என்பது என்ன?

ஆவணிஅவிட்டம் என்பது நம் வேதத்திற்கான ஒரு பண்டிகை 

இதை  உபாகர்மா என்பர்

ஆவணி அவிட்டம் என்றால் புது பூணூல் மாற்றி கொள்வது என்பது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும் 

உபாகர்மா என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அருமையான பண்டிகை பல அபூர்வமான வேதோக்த அங்கங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்பதுதான் உண்மையான ஒன்று

புராதனமான (ப்ராசீனமான) நமது வைதிக சம்ப்ரதாயத்தில் பல பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடுவது வழக்கம் 

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு முக்கியத்துவம் அதுமாதிரி வேதத்திற்காக மட்டுமே ஒரு பண்டிகை உண்டு என்றால் அது உபாகர்மா எனும் இந்த ஆவணி அவிட்ட பண்டிகைதான் 

ஆவணியாவிட்டம் என்று சொல்லப்படும் இந்த பண்டிகை வேதத்தை தவிர வேறு எதை உத்தேசித்தும் கொண்டாடப்படுவதில்லை.

இக்காலத்தில் நம்மில் எத்தனை பேர் ஆவணியாவிட்டத்தன்று இந்த பண்டிகை வேதத்தை உத்தேசித்து தான் கொண்டாடப்படுகின்றது என அறிந்துள்ளோம் என்றால் அது மிக மிக குறைவானவர்களே

சரி இதனை உபாகர்மா என கூறாமல் ஆவணி அவிட்டம் என கூறுவதேன்?

பொதுவாக ஆவணி மாதத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் இந்த பண்டிகை வருவதால் இதற்கு ஆவணி அவிட்டம் என்று ஒரு பெயர் வந்திருக்கலாம் 

மேலும் ச்ரவண மாதத்தில் வருவதால் இதற்கு ‘ச்ரவணம்’ என்றும் ஒரு பெயர் உண்டு

உபாகர்மா என்பதுதான் இதன் உண்மையான பெயர்

உபாகர்மா என்றால் என்ன?

உபாகர்மா என்ற வார்த்தைக்கு ஆரம்பம் என்று அர்த்தம் அதாவது வேதாரம்பம்

இதனை 

”ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயம் உபாக்ருத்ய மாஸ ப்ரதோஷே ந அதீயீத தேஷ்யாம் பெளர்ணமாஸ்யாம் ரோஹின்யாம் வா விரமேத்” என்று ஆபஸ்தம்பர் கூறுகிறார்

அதாவது ஸ்லோகத்தின் முதல் பகுதியின் அர்த்தம் என்னவென்றால் 

ஆடி அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பெளர்ணமி அன்று முதல் ச்ராவணமாகையால் ப்ரஹ்மச்சாரிக்கும் மற்றுமுள்ள க்ரஹஸ்தர்களுக்கும் இந்த நாள் வேதங்களை கற்க்க ஆரம்பிக்க வேண்டிய நன்னாள். அதாவது வேதாரம்பம் செய்ய உகந்த நாள் என்பது ஆகும் 

வேத ஆரம்பம் என்றால் வேத்த்திற்க்கு முடிவு உண்டா?

இல்லை தோஷம் உண்டாம் அதை போக்கி பின்பு மீண்டும் வேத ஆரம்பம் செய்யனுமாம் 

வேதத்திற்க்கு தோஷமா ? என்னது ஸ்வாமி 

ஆம் வேதத்திற்கு யாதயாம தோஷம் வருகின்றதாம் (அதாவது மீந்து போய் ஜெலம் விட்ட ஆகாரத்தை 'பழையது’ என சொல்லுகிறோம் அல்லவா அது மாதிரியானது இந்த யாதயாம தோஷம்) இந்த தோஷம் நீங்கவே ஆவணி அவிட்டம் என்னும் உபாகர்மா செய்யப்படுகின்றது

வேதத்திற்குபோய் ‘பழையது ' என்ற தோஷம் எப்படி வரும் எனும் சந்தேகம் நமக்கு வந்தால் அது நியாயம்தான்

வேதத்திற்கு இயற்கையாக எந்த தோஷமும் வராது

நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் (ரிஷிகளோ மகான்களோ அல்ல ) வேதத்தை பாராயணம் செய்வதனால் அதற்கு அப்படி ஒரு தோஷம் வருகிறதாம்

உதாரணத்திற்கு நாம் வழிபடும் கோவில்களை எடுத்துக் கொள்வோம் 

கோவில்களுக்கு கும்பாபிஷேகம் பவித்ரோத்ஸவம் என நாம் ஏன் செய்கின்றோம் 

அந்த கோவிலில் நடந்த விழாக்களில் உச்சரித்த மந்திர அபசாரம் நித்திய கைங்கர்யத்தில் ஆசாரகுறைவு தெரியாத தந்திர அபசாரம் என பலவற்றுக்கு பரிகாரம் காண வேண்டி செய்கிறோம் 

அதே போல் வேதத்தை நாம் உச்சரிப்பதில் ஏற்பட்ட குறை ஒதுவதில் பின்னம் அடைந்த குறை சொல்லுவதில் அக்கறையின்மை வேகமாக சொல்லுதல் என பல விதமாக நாம் செய்த அபசாரங்களை போக்கவே இந்த உபாகர்மா என்னும் ஆவணி அவிட்டம்

இந்த உபாகர்மா வைபவத்தில் நாம் மட்டுமல்ல பகவானை தவிர முப்பத்து முக்கோடி தேவர்களும் ப்ரஹ்மாவும் சம்பந்தப்பட்டுள்ளார் 

வேதத்தை பிரம்மனோ ரிஷிகளோ இயற்றவில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே

ஸர்வஞ்னான பகவான் ஸங்கல்பத்தால் உருவானது என அந்த வேதமே கூறுகின்றது

அதற்கான வாக்யம்:

“ஸோ காமாயத! பஹுஸ்யாம் ப்ரஜா யேயேதி !”

பகவானின் அறிவான அந்த வேதத்தை அவர் முதன்முதலில் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்தார் 

எப்படி உபதேசித்தார்?

உபதேசம் செய்தார் என்னும்போது வாயால் உபதேசித்ததாக நினைக்க வேண்டாம். சங்கல்பத்தினாலேயே உபதேசித்தார்

ப்ரஹ்மாவிற்கு பிறகு அவரது வழிதொன்றல்களான  ப்ரஜாபதிகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் முதலானவர்கள் ‘சந்தை’ ‘திருவை’ என தினமும் சொல்லி வேதத்தை தங்களிடம் வரப்படுத்தினார்கள்

ப்ரஹ்மா பகவானிடமிருத்து  வேதத்தை உபதேசம் பெற்ற நாள் இன்றுதான் ( ஆவணி அவிட்டம் அன்று தான்)

ஆதலால் இது வேதத்தின்  ‘உதித்த நாளாக்கான விழாவாகவும்’ கொள்ளலாம்

வேதத்தை கற்றவர்கள் யாராயினும் பகவானை தவிர வேதாத்யயனம் செய்தவர்கள் உபாகர்மா செய்து வேதம் சொன்னால்தான் வேதத்திற்கு மஹிமை உண்டு என சாஸ்திரம் சொல்லுகின்றது

 ஓய் ஸ்வாமி நாம்தான் வேத அத்யயனம் செய்யவில்லையே அப்போ எனக்கு உபாகர்மா அனுஷ்டிப்பதிலிருந்து விதிவிலக்கு உண்டா? “’  என்று சிலர் கேட்பது அடியேன் காதில் விழுகிறது 

தேவரீர்கள் வேதாத்யயனம் செய்யாமலிருக்கலாம் ஆனால் உபாகர்மா அனுஷ்டித்துதான் ஆகவேண்டும் எதற்க்காக ஏன்? செய்யனும் 

அதாவது நித்யப்படி நாம் செய்யும் சந்தியாவந்தனத்தில் வரும் மந்திரங்கள் மேலும் உச்சாடனம் செய்யும் காயத்ரி மந்திரம் 

நாம் கலந்து கொள்ளும் பூஜை புனஸ்காரங்களில வரும் மந்திரங்கள் நாம் செய்யும் பிதுர் ச்ராத்தம் போன்ற கார்யங்களில் வரும் மந்திரங்கள் என நாம் வருஷம் முழுவதும் பல முறை பல வித மந்திரங்களை சொல்ல வேண்டியதுள்ளது இவைகள் நமக்கு பலனளிக்க வேண்டுமானால் உபாகர்மா செய்தே ஆக வேண்டும்

அதாவது நாம் சொல்லும் மந்திரங்களுக்கு சக்தி வர வேண்டுமானால் உபாகர்மா ச்ரத்தையாக அனுஷ்டித்தே ஆக வேண்டும் என்கிறது சாஸ்திரம் 

இப்போது புரிகிறதா ஆவணிஅவிட்ட உபாகர்மாவுக்கும் வேத ஆரம்பத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் உள்ளது என

பொதுவாக பிராமணர்களில் ஒருவனுக்கு உபநயனம் ஆனவுடன் வேத பாடசாலையில் சேர்ந்து வேதம் கற்க முடியாது

அதாவது பூணூல் மற்றும் ப்ரம்மோபதேசம் ஆன மாத்திரத்திலேயே ப்ரஹ்மச்சாரிக்கு வேதம் கற்க யோக்யதை வருவதில்லை

அந்த பிரம்மசாரி முதல் உபகர்மா அதாவது தலை ஆவணியாவிட்டம் ஆன பிறகுதான் வேதம் கற்கின்ற யோக்யதை வருகின்றது 

உங்களுக்காக உபாகர்மா அன்று நாம் செய்யும் சில வைதிக கர்மாக்களில் வரும் சில அற்புதமான விஷயங்கள் ஒரு கிளான்ஸ்

முதலில் ஒரு நூதன யக்ஞோபவீத தாரணம்

ஏற்கனவே நாம் கூறியபடி வேத
ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் வேத முடிவு அதாவது ‘உத்ஸர்ஜனம்’ ஒன்றும் இருக்க வேண்டும் இல்லையா 

வேதத்தை யதோக்தமாக உத்ஸர்ஜனம் செய்யவேண்டும் இந்த உத்ஸர்ஜனத்தை அனுஷ்டிப்பவர்கள் மிக மிக குறைவு

ஆதலால்தான் உத்ஸர்ஜனம் செய்யாததற்கு ப்ராயஸ்சித்தமாக 

‘காமோகர்ஷீத்...’ என்கின்ற ஜபத்தை இன்றயதினம் செய்கிறோம் 

ஏனெனில் 'காமோகர்ஷித்.. என்ற ஜெபம் ஒரு சர்வ பாப ப்ராயஸ்சித்த மந்திரமாகவும் விளங்குகின்றது

அதன் பின் மந்திரங்களை நமக்கு பிரம்மாவிடம் இருந்து ஆதியில் பெற்று தந்த ரிஷிகளையும் தேவதைகளையும் சங்கல்பத்தால் பூஜித்து அவர்களது தபசக்தி மூலம் அவர்களுடைய அனுக்ரஹத்தை பெற வேண்டி 

இந்த ச்ராவணத்தில் ப்ரஜாபதி முதலிய ஒன்பது பேர்களுக்கு காண்டரிஷி தர்ப்பணம் செய்கிறோம் 

அதனை தொடர்ந்து ஹோமமும் சொல்லப்பட்டுள்ளது

மேலும் இன்றய ஆவணி அவிட்ட உபாகர்மா அன்று சொல்லப்பட்டும் மஹா ஸங்கல்பம் மிகவும் உயர்ந்தது 

அந்த சங்கல்பத்தில் நாம் செய்த செய்யபோகிற பல பாவங்களும் மனசால் வாக்கால் செய்த தவறான செயல்களுக்கும் நம் இந்திரியங்களால் செய்த தோஷங்களும் நீங்குவதற்கான விசேஷ சங்கல்ப பிரார்த்தனை வாக்யங்கள் கொண்டது 

இந்த ஸங்கல்பத்தை  பக்தி ச்ரத்தையோடு சொல்லுவதால் செய்த பாவம் விலகி நல்ல பலனை சொல்லுபவர்களுக்கு அளிக்கும்
( பகவான் நம் பாவங்களை போக்க என்னபாடு படுகிறான் -அப்பாவை மதிக்காத இக்கால பிள்ளைகள் போல் நாம் தான் அதை உதாசீனம் பண்ணுகிறோம்)

அந்த சங்கல்பத்தில் பல தேவதா மூர்த்திகளின் சன்னிதிகளையும் புண்ய க்ஷேத்ரங்களையும் புண்ய நதிகளையும் நாம் நிணைவிற்கு கொண்டுவந்து சங்கல்பம் செய்யவேணும்

ஏன் செய்ய வேணும்?

நாம் செய்யும் காரியங்களின் பலன் நமக்கு உறுதியாக கிட்ட வேண்டுமானால் அதாவது அந்த வருஷத்தில் நாம் பல சந்தர்பங்களில் செய்யும் பலவிதமான கர்மாக்களில் வரும் மந்திரங்கள் பலமுள்ளதாக மாறி நமக்கும் பிதுர்களுக்கும் சந்ததிகளுக்கும் ஸ்ரேயஸ் அளிக்க வேண்டும் என நாம் நினைத்தால் கண்டிப்பாக ஆவணி அவிட்ட நாளில் நாம் இந்த உபாகர்மாவை ச்ரத்தையாக செய்ய வேண்டும்

இந்த உபகர்மாவை செய்யாவிட்டால் பாவமா? இல்லை தோஷம் ஏதும் வருமா?

ஆம் பாவம் தான்  உபாகர்மாவை இன்றய தினம் ச்ரத்தையாக அனுஷ்டானம் செய்யாவிடில் பாவம் மட்டுமல்ல பலவித தோஷமும் ஏற்படும் சந்தேகமே வேண்டாம்

இதை செய்வதால் நம்மிடமிருக்கும் அல்லது நமக்கு தெரிந்த சொல்ப வேத மந்திரமானது அதனது வீர்யத்தோடு நம்முடன் கூடியதாகயிருக்கும் அதன்மூலம் 
நற்பலனை நமக்கு சேர்க்கும்

என்ன அவர் செய்தது போல ஆவணிஅவிட்டத்தை ஏனோ தானோ என அவசரம்அவசரமாக செய்யாமல் இந்த வருடம் முதல் - முறையாக செய்து வீரியத்துடன் அந்த அந்த வருடங்களில் நாம் செய்யும் கர்மாக்களின் பலனை பெற்று உய்வோமா