எரிமேடையில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் உடலைக் கடைசியாகப் பார்க்க அமெரிக்காவிலிருந்து பறந்து வந்தான் சிவராமன்.
எனக்கு உயிர் தந்த உடல், நேற்று வரை அப்பா ஓர் உயிர். இன்று உடல். நாளை வெறும் சொல்.
அப்பாவின் மரணத்திற்கு அழமுடியாத அழத்தெரியாத ஒரு தலைமுறை தயராகிவிட்டது.
மயானத்தில் மனைவியின் குரல் கைபேசியின் மூலம் ஒலித்தது. சடங்குகளில் தள்ளி நல்லுங்கள் 'இன்ஃபெக்க்ஷன்' வந்து தொலைக்கப் போகுது.
வெந்து தணிந்தது கூடு.
மொட்டையடிப்பதை மறுத்து நீ........ண்ட யோசனைக்குப் பிறகு மீசையை மட்டும் தியாகம் செய்தான்.
உடைந்த குரலில் கதறி அழுதாள் அம்மா.
அவரை பொழைக்க வைக்க வேண்டாம். சாகும்போது பக்கத்துல கூட இல்லையே.
என்னம்மா பண்றது...? நான் இருக்கற எடம் ரொம்ப தூரம்.
ஆமாப்பா....... எல்லாமே தூரமாப்போச்சு.
இரு வாரம் கடந்தது.
ஒரு இடம் பாத்திருக்கிறேன்மா? பெத்த தாய் மாதிரி உன்னக் கவனிச்சுக்குவாங்க "பழத்தோட்டம்னு" ஒரு முதியோர் இல்லம்.
அப்ப வீடு........?
நீயே இல்லாதபோது இந்த வீடு எதுக்கு ? வித்திடலாம்மா.
மகனே சிவராமா? எனக்கு ஒரே ஒரு ஆசை என்றாள் அம்மா.
அப்பா கிடத்தப்பட்டிருந்த தரையில் விழுந்தாள். உருண்டாள். கண்ணீரால் நனைந்தாள்.
கவலையே படாதீங்க இனி உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இவங்க அம்மாதான்" என்றான் பழத்தோட்டத்தின் காப்பாளர்.
நியூயார்க் சென்றான் சிவராமன். மனைவி வரவேற்க காத்திருந்தாள்.
அமெரிக்காவில் இறங்கியதும் அம்மா இறந்த செய்தியை மனைவி கூறினாள்.
மறுநாள் அதே நேரம் அம்மாவின் உடல் மின்மயானத்தில் கொண்டு செல்வதை கணினித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
13412 கி.மீ தூரத்தில் "online ல்" எரிந்து கொண்டிருந்தாள் அம்மா.
(பல இடங்களில் இன்றைய நிலமை இதுதான்.)
No comments:
Post a Comment